• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாளை டாஸ்மாக் போரவங்க கவனத்துக்கு – வயது – நேரம் முக்கியம் !

May 6, 2020

மதுக்கடைகளில் எந்தெந்த நேரத்தில் எந்தெந்த வயதினருக்கு மது விற்பனை செய்யவேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஊராடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் சென்னை மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படவுள்ளன.
வழக்கமான நேரத்தை விட நாளை முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவி வரும் வேளையில் டாஸ்மாக் கடையை திறந்தால் தனிமனித விலகலை கடைபிடிக்க முடியாது என பல்வேறு தரப்பில் இருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இந்நிலையில் கடைகளுக்கு முன்பாக கூட்டம் கூடுவதை தடுக்க வயது வாரியாக வாடிக்கையாளர்கள் வந்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

40-50 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை

40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி

இது தொடர்பாக சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களின் காவல் துறை உயரதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும் படிக்க