• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாயை காப்பாற்ற சென்ற தொழிலதிபர் கடலில் மூழ்கி மரணம்

May 5, 2017 தண்டோரா குழு

துபாயில் கடலில் சிக்கிய நாயை காப்பாற்ற சென்ற தொழிலதிபர் கடலில் மூழ்கி பலியானார்.

மும்பை நகரிலுள்ள அந்தேரியைச் சேர்ந்தவர் நிதின் ஷெனாய்(41). அவர் தேஜோரா டெக்னாலஜீஸ் லிமிடெட் என்னும் ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். தொழில் விஷயமாக துபாய் செல்வது வழக்கம்.

சமீபத்தில் வேலை காரணமாக துபாய் சென்றுள்ளார். அங்குள்ள பாம் ஜுமைரா என்னும் கடற்கரையில் நடந்துக்கொண்டிருந்த போது, கடலில் ஒரு நாய் சிக்கி தத்தளித்து கொண்டிருந்ததை கண்டு, அதை காப்பாற்ற கடலில் குதித்த அவர் சடலமாக கரைக்கு திரும்பினார்.

“நிதினுக்கு நாய்கள் என்றால் மிகவும் பிரியம். நீச்சல் குளத்தில் மட்டும் நீச்சலடிக்க தெரியும். கடலுக்குள் நீந்த தெரியாது. அவரில்லாமல் எப்படி வாழப்போகிறேனோ தெரியவில்லை” என்று கண்ணீருடன் நிதின் மனைவி தெரிவித்தார்.

கடலில் மூழ்கியதால் தான் நிதின் மரணமடைந்தார் என்று துபாய் காவல்துறையினர் இறப்பு சான்றிதழ் தந்து, அவருடைய உடலை இந்தியாவிற்கு எடுத்து செல்லலாம் என்று துபாயின் அல் ஹம்ரியா நகரிலுள்ள இந்திய தூதர அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க