April 22, 2019 தண்டோரா குழு
நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களை அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏற்கனவே 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்த நிலையில் காலியாக உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்மே 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர்களை அமமுக பொதுச்செயலாளர் தினகரன் இன்று அறிவித்தார்.
அரவக்குறிச்சி தொகுதியில் – சாகுல் ஹமீது
சூலூர் தொகுதியில் – சுகுமார்
ஒட்டப்பிடாரம் தொகுதியில்- சுந்தர்ராஜன்
திருப்பரங்குன்றம் தொகுதியில் – மகேந்திரன்