• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான்கு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

August 17, 2020 தண்டோரா குழு

கோவை பேரூர் அருகே நான்கு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த ஆகஸ்ட் 12ம் தேதியன்று இரவு சேகர் என்பவருக்கு சொந்தமான TN 37 BU 1563 அசோக் லேலாண்ட் தோஸ்த் வாகனத்தை வாடகைக்கு எடுத்து ஓட்டி வரும் கார்த்திக் என்பவர் பேரூர் காவல் நிலைய சரகம் ஆறுமுக கவுண்டனூரில் அமைந்துள்ள கார்த்திக்கின் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார்.

மறுநாள் காலை வீட்டின் வெளியே சென்று பார்த்த போது வாகனத்தை யாரோ திருடிச் சென்றதை அறிந்து, வாகன உரிமையாளர் சேகருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் இது தொடர்பாக 16ம் தேதியன்று சேகர் அளித்த புகாரின் பேரில் பேரூர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆண்டியப்பனூரை சேர்ந்த இளவரசன் என்பவரை கைது செய்த போலீசார், திருடப்பட்ட வாகனத்தை கைப்பற்றினர். மேலும் குற்றவாளி இளவரசன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக துரித விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கண்டறிந்து வாகனத்தை கைப்பற்றிய பேரூர் காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க