• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாட்டிலேயே முதல் முறையாக பொறியியல் கல்லூரியில் கிராபிக் டிசைன் பட்டப்படிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

April 28, 2021 தண்டோரா குழு

நாட்டிலேயே முதல் முறையாக பொறியியல் கல்லூரியில்கிராபிக் டிசைன் பட்டப்படிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கே.பி.ஆர்.கல்லூரி மற்றும் மாயா அகாடமி இடையே செய்யப்பட்டது.

பல்கலைக்கழக மானியக்குழு கல்வி முறையில் புதிய மாற்றமாக தொழில்முறை கல்விகளை ஊக்குவித்து வருகின்றது.இந்நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக பொறியியல் கல்லூரியில் அனிமேட்டிக்ஸ் தொடர்பான புதிய கல்வி முறையை பயிற்சி அளிக்கும் விதமாக கே.பி.ஆர்.கல்லூரியுடன் மாயா அகாடமி ஆப் அட்வான்ஸ்டு சினிமேட்டிக்ஸ் எனும் மேக்குடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதற்கான விழாவில் பாராதியார் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் காளிராஜ் கலந்து கொண்டார்.

இதில் அவர் பேசுகையில்,

தற்போது தொழில் முறை கல்விகளை கற்பதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும், பட்டபடிப்பை முடிக்கும் மாணவர்கள் தொழில் சார்ந்து இருப்பதையே விரும்புவதாக கூறிய அவர், பொறியியல் துறையில், இன்றைய தலைமுறைக்கு அனிமேசன் மற்றும் கிராபிக்ஸ் டிசைன் படிப்புகள் நிச்சயமாக மாணவர்களின் எதிர்காலத்திற்கு உதவும் என்றார்.

மாயா அகாடமி ஆப் அட்வான்ஸ்டு சினி மேடிக்ஸ் மற்றும் ஜே.டி.கல்வி மற்றும் பயிற்சி மையத்தினருடன் இணைந்து கல்லூரியில் பட்ட படிப்பு அறிமுகபடுத்தபட்டுள்ள நிலையில்,இந்த படிப்புக்கு உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உள்ளது குறிப்பிடதக்கது.

நிகழ்சியில் தலைமை செயல் அதிகாரி சம்ஜித் தன்ராஜ், முதல்வர் அகிலா, தனராஜன்,சமீர் உசைன், மணிகண்டன், ரமேஷ்,பிரேம் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க