• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாட்டின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று பதவி ஏற்றார்

July 25, 2017 தண்டோரா குழு

நாட்டின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிகாலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையெடுத்து, நடைபெற்ற குடியரசுத் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, நாடாளு மன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற பதவி பதவி ஏற்பு விழாவில் ராம்நாத் கோவிந்துக்கு இந்தியாவின் தலைமை நீதிபதியான ஜேஎஸ் கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.அப்போது 21 குண்டுகள் முழங்க அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜார்கண்ட் முதல்வர் ரகுவர்தாஸ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க