• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாட்டின் உயரிய விருதுக்கு தோனி பெயர் பரிந்துரை

September 20, 2017 தண்டோரா குழு

நாட்டின் 3-வது உயரிய விருதான பத்மபூஷன் விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனியின் பெயரை இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளது.

டி20, 50 ஓவர் உலககோப்பை, சாம்பியன் டிராபி என அனைத்து விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இதுவரை தோனி 302 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 9737 ரன்கள் குவித்துள்ளார். அதில் 10 சதம், 66 அரைசதங்கள் அடித்துள்ளார். அதேபோல் 90 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 4876 ரன்களை குவித்துள்ளார். அதில் 6 சதங்கள், 33 அரைசதங்கள் குவித்துள்ளார். 78 டி20 ஓவர் போட்டிகளில் பங்கேற்று 1212 ரன்களை குவித்துள்ளார்.

இதையடுத்து, இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனாக பல சிறப்புமிக்க வெற்றிகளை பெற்றுத்தந்தமையை கவுரவிக்கும் வகையில் பத்மபூஷன் விருதுக்காக மகேந்திர சிங் தோனி பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. 36 வயதாகும் தோனி தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க