• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி- தினகரன் பேட்டி

December 26, 2018 தண்டோரா குழு

தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து சில கட்சிகளுடன் பேசிவருவதாக அமமுக துணைபொதுச்செயலாளர் டிடிவிதினகரன் தெரிவித்துள்ளார்.

காலியாக உள்ள 20 தொகுதிகள், வரக்கூடிய 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. திமுக, காங்கிரஸ்கூட்டணி உறுதியாகி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. பிளவுபட்டுள்ள அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளின் நிலைமை குறித்து தெரியவில்லை. அமமுகவில் இருந்து செந்தில்பாலாஜி திமுகவில் ஐக்கியமாக, டிடிவிதினகரன் உள்ளிட்ட பலர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் இன்று செய்தியாகளை சந்தித்த டிடிவி தினகரன் கூறுகையில்,

நாங்கள், கூட்டணி குறித்து சில கட்சிகளுடன் பேசிவருகிறோம். பின், தனித்து போட்டியிடவும் நாங்கள் தயாராக உள்ளோம். எம்ஜிஆர், ஜெயலலிதாவால் செழுமை பெற்ற சத்துணவு திட்டத்தை சிறந்தமுறையில் தமிழகஅரசு செயல்படுத்தவில்லை. 25க்கும் குறைவாக உள்ள சத்துணவு மையங்களை தொடர்ந்து நடத்தாமல் இருக்க நினைப்பது தமிழக அரசின் இயலாமையைகாட்டுகிறது.

மேலும், முதல்வர் செயல்பாடு சரியில்லை சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மேற்கொண்டுள்ள முடிவை திரும்ப பெறவேண்டும் என்று அமமுக வலியுறுத்துகிறது.

மேலும் படிக்க