• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதியை அறிவித்தார் – நடிகர் பிரகாஷ் ராஜ்

January 5, 2019 தண்டோரா குழு

நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் தான் போட்டியிடும் தொகுதியை அறிவித்துள்ளார்.

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகராக நடித்து வருபவர் பிரகாஷ் ராஜ். இவரின் சிறுவயது தோழியான கர்நாடகாவின் முற்போக்கு சிந்தனை கொண்ட எழுத்தாளர் கவுரி லங்கேஸ் இந்து அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து அரசியல் கருத்துக்கள் பேச ஆரம்பித்தார். குறிப்பாக அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

இதற்கிடையில், புத்தாண்டு அன்று தனது அரசியல் அறிவிப்பை அறிவிப்பை வெளியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ், புதிய ஒரு தொடக்கம் கூடுதல் பொறுப்பு, உங்கள் அனைவரது ஆதரவோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட உள்ளேன்.எந்த தொகுதி என்பதை விரைவில் அறிவிக்கிறேன். உங்கள் முன்னாள் இருப்பது மக்களாட்சி என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க