• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாசாவுடன் இணைந்த உபர்

November 9, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் உள்ள உபேர் நிறுவனம் நாசாவுடன் இணைந்து பறக்கும் டாக்சிகளை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

அமெரிக்காவின்உபேர் நிறுவனம் பறக்கும் டாக்சிகளை அறிமுகப்படுத்த உதவும் விமான போக்குவரத்து மேலாண்மை அமைப்பை,நாசாவுடன் இணைந்து உருவாக்க செயல்பட்டு வருகிறது. அந்த பறக்கும் டாக்ஸிக்கு ‘உபேர் ஏர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வரும் 2௦2௦ம் ஆண்டு உபேர் ஏரின் செயல்திறனை உலகிற்கு காட்டிய பிறகு, வரும் 2023ம் ஆண்டு முதல் அதன் சேவையை தொடங்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாசா வெளியிட்ட அறிக்கையில், “ஆளில்லா வான்வெளி அமைப்பிற்காக விமான போக்குவரத்து மேலாண்மை அமைப்பை உருவாக்க, நாசாவிண்வெளி நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் பல நிறுவங்களில் உபேர் நிறுவனமும் ஒன்று” என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில், உபேர் நிறுவனம் அதன் விமான இயக்குநராக பணிபுரிவதற்காக நாசாவின் 30 வருட அனுபவமிக்க மார்க் மூரை நியமித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க