• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாசாவிற்கு ராக்கெட் அனுப்பிய சிறுவன்

August 22, 2017 தண்டோரா குழு

லண்டனை சேர்ந்த 5 வயது சிறுவன் ராக்கெட் ஒன்றை வரைந்து நாசாவிற்கு அனுப்பியிருந்த நிலையில் தற்போது நாசா,அவனுடைய கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இங்கிலாந்தை சேர்ந்த 5 வயது சிறுவன் இட்ரிஸ் ஹைல்டன் , தான் வரைந்து அனுப்பியிருக்கும் ராக்கெட் போன்ற ராக்கெட்டை உருவாக்க வேண்டும் என்றும் அந்த ராக்கெட்டை தானே விண்வெளிக்கு ஒட்டி செல்வதாகவும், தனக்கு விண்வெளி வீரர் உரிமத்தை தரவேண்டும் என்று அவனுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான்.

அவனுடைய கடிதத்தையும் அவன் வரைந்த ராக்கெட்டையும் கண்ட நாசாவின் ஜெட் புரோபல்சன் ஆய்வகத்தின் பொறியாளர் கெவின் டிரூயின்

“உன்னுடைய ராக்கெட் வடிவம் மிகவும் அருமையாக இருந்தது. ராக்கெட்டை ஓட்டி செல்லும் விண்வெளி வீரர் ஆகுவதற்கு நீ எடுத்து வைக்கும் முதல் படி ஆகும். விண்வெளி வாகனம் மற்றும் கருவிகளை பயன்படுத்த கடின உழைப்பும் முழு அர்ப்பணிப்பும் தேவை. முதலில் நீ பள்ளியில் ஆர்வத்துடன் படிக்க வேண்டும். உன்னுடைய ஆர்வத்தாலும் கடின உழைப்பாலும், எதிர்காலத்தில் நாசாவில் சேர்ந்து பணி புரியலாம். உனக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்” என்று அந்த பதில் கடிதத்தில் எழுதியிருந்தார்.

முன்னதாக கிரகங்களை பாதுகாக்கும் அதிகாரி பணிக்கு விண்ணப்பித்த 4-ம் வகுப்பு பயிலும் 9 வயது ஜேக் டேவிஸ் என்ற சிறுவனுக்கு நாசாவின் கிரக ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் ஜேம்ஸ் எல். கிரீன் ரால், ஜக் டேவிஸின் உயர்வான எண்ணத்தையும், ஆர்வத்தையும் பாராட்டி ஒரு கடிதம் எழுதி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க