• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாங்கள் இறந்துவிட்டோம் என நினைத்துக் கொண்டு நினைவிடமாக அறிவித்துள்ளார்களா?: ஜெ.தீபா

August 17, 2017 தண்டோரா குழு

நாங்கள் இறந்துவிட்டோம் என நினைத்துக் கொண்டு நினைவிடமாக அறிவித்துள்ளார்களா என ஜெ.அண்ணன் மகள் தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும் அவர் வாழ்ந்த போயஸ்கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவிடமாக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.தீபா,

நானும் என் சகோதரர் தீபக்கும் தான் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசுகள். இதுவரை காலில் விழுந்து கிடந்தவர் இப்போது திடீரென விழித்துக் கொண்டு விசாரணை கமிஷன் அமைத்துள்ளார்.வேதா நிலையத்தை சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை.அதை விட்டுத்தரவும் மாட்டோம்.

வேதா நிலையம் எங்களது பூர்வீக சொத்து என ஆணித்தரமாக கூறுகிறேன்.எங்களிடம் எந்த கருத்தையும் அரசு தரப்பில் இருந்து கேட்கவில்லை.நாங்கள் இறந்துவிட்டோம் என நினைத்துக் கொண்டு நினைவிடமாக அறிவித்துள்ளார்களா? போயஸ் கார்டனை நினைவிடமாக அறிவித்த அரசின் நடவடிக்கையை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க