• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நவாம்ஸ சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோயில் கும்பாபிஷேகம் பஜ்ரங்கி கவச அலங்காரம்

June 25, 2023 தண்டோரா குழு

கோவை ஜெங்கம்மநாயக்கன்பாளையம் (நவாம்ஸ) அருள்மிகு ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று (ஜூன் 25-ம் தேதி) வெகு விமர்சையாக நடைபெற்றது

கோயம்புத்தூர் வடக்கு மாவட்டம், குருடம்பாளையம் கிராமம்,துடியலூர் அடுத்துள்ள ஜங்கம்மநாயக்கன்பாளையம் (நவாம்ஸ)அருள்மிகு ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோயில் ஜூர்ணோத்தாரண ரஜதபந்தன (ஸம்ப்ரோக்ஷண) மகா கும்பாபிஷேகம் இன்று (ஜூன் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை – சோபகிருது வருடம் ஆனி மாதம் 10- நாள்) காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற்றது.

மேலும் ஸ்ரீ அரசமரத்து ஆனந்த விநாயகர், ஸ்ரீ சொர்ண கால பைரவர், நவக்கிரகம் மற்றும் ஸ்ரீ சீதா சமேத ஸ்ரீ ராமச்சந்திர சுவாமி உட்பட அனைத்து விமானங்களும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் பஜ்ரங்கி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

முன்னதாக இதற்கான நிகழ்ச்சிகள் கடந்த 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு துவங்கியது.இன்று ஜூன் 25 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு மங்கள இசை, சுப்ரபாதம்,அக்னி ஆராதனம், கால சாந்தி, பிரதான ஹோமம்,மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம்,கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை 8.00 மணியிலிருந்து மகா அன்னதானம் நடைபெற்றது.

இது குறித்து நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோயில் தலைவர் செல்வராஜ் கூறும்போது :-

ஒன்பதுவிதமான அம்சத்துடன் அருள்பாலித்து வரும் நவாம்ஸ ஶ்ரீ ஆஞ்சநேயரின் சிறப்பு அம்சமானது

1. வரம் தரும் வலது உள்ளங்கையில் மகாலட்சுமி. 2.ஆஞ்சநேயருக்கு வரம் தந்த தசரத மைந்தன், சீதாதேவி 3. வடக்கு நோக்கிய முகம் வராஹமுக தரிசனம். 4.ஆஞ்சநேயர் கொண்டு வந்த சாலாக்கிராமம் கோபுரம் 5.சிவபெருமானின் ஒளிவட்டத்தில் அஞ்சனை புத்திரன்.6. நவக்கிரஹதோசம் விலக வாலில் மணி. 7. துஷ்டர்களை அழிக்க இடது கரத்தில் கதாயுதம். 8. ஆஞ்சநேயருக்கு அதிர்ஷ்டமான 8 அடி கருவரை. 9. பக்தரை சுவர ஸ்ரீபால சஞ்சீவி கொண்டு நவ அம்சங்களுடன் அருள் பாலிக்கும்
நவாம்ஸ ஆஞ்சநேயரை வணங்கினால்
சகல காரியங்களும் சித்தியடையும்.

இந்த கும்பாபிஷேக விழாவை யாக சாலை ஸர்வ சாதகம் :

ஸ்ரீ வைக்கானஸ ஆகம ரத்னா சோளிங்கர் ஸ்ரீ ஸ்ரீ ராம் பட்டாச்சாரியார் அவர்கள் தலைமையில் தல அர்ச்சகர் அகம ரத்னா கரம் சிவ ஸ்ரீ மெய்கண்ட சிவ சிவாச்சாரியார் ஆகியோர் நடத்தி வைத்தார்கள்.தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஸ்ரீ ராமர் சீதா திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜைகளும் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் குருடம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொது மக்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க