• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்கள் சபரிமலைக்கு வர மாட்டார்கள்தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து

October 14, 2017 தண்டோரா குழு

உச்சநீதிமன்றம் அனுமதித்தாலும் நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்கள் சபரிமலைக்கு வர மாட்டார்கள் என்று கூறி திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நுழைவதற்கு, பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்த வழக்கை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியலமைப்பு சட்ட அமர்வின் விசாரணைக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்,கோட்டையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரையார் கோபாலகிருஷ்ணன்,

சபரிமலையில் வழிபாடு மற்றும் பாதுகாப்பு இரண்டும் மிகவும் முக்கியம். 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை சபரிமலையில் நுழைய உச்ச நீதிமன்றம் அனுமதித்தாலும், கண்ணியமான குடும்பத்தை சேர்ந்த பெண்கள் அங்கு வர மாட்டார்கள்.சபரிமலையை ஒரு தாய்லாந்தாக மாற்ற யாரும் முயற்சிக்க வேண்டாம் என கூறினார்.

அவருடைய இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. எனினும் பிரையார் கோபால கிருஷ்ணனுக்கு ஆதரவாக சில கேரள பெண்ணுரிமை அமைப்புகளும் குரல் கொடுத்துள்ளன.

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மனு அரசியல் அமைப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ள றிலையில் சபரிமலையில் பெண்களின் பிரவேசம் குறித்து விவாதம் சூடுபிடித்துள்ளது.

மேலும் படிக்க