• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடைபாதையில் சிறியளவில் கடை போட அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு

April 17, 2023 தண்டோரா குழு

நடைபாதையில் சிறியளவில் கடை போட அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்த திராவிட சாலையோர நடைபாதை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர்.

கோவை காந்திபுரம் 8 ஆவது வீதி சீனிவாச புரத்தில் மார்கெட் செயல்பட்டு வருகிறது. மார்க்கெட் நடைபாதை ஓரமாக , போக்குவரத்துக்கும்,பொதுமக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் 20 க்கும் மேற்பட்டவர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர்.40 நாட்களுக்கு முன்பு கமர்சியல் கோர்ட் வருவதால் எட்டு நாட்களுக்கு மட்டும் நடைபாதையில் வியாபாரம் செய்ய வேண்டாம் என அதிகாரிகள் கேட்டனர். அதன்பேரில் நாங்கள் கடை போடவில்லை.

இதனையடுத்து மீண்டும் கடை போட கேட்ட போது,மாநகராட்சி நிர்வாகமும், காவல் துறையும் அனுமதி அளிக்கவில்லை. மூன்று முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கடந்த 45 ஆண்டுகளாக நடைபாதையில் சிறு வியாபாரம் செய்து வருகிறோம். கடை நடத்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க