• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை காவ்யா மாதவனிடம் 6 மணி நேரம் போலீசார் விசாரணை

July 26, 2017 தண்டோரா குழு

கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் நடிகை காவ்யா மாதவனிடம் கேரள போலீசார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கேரளாவில் நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப், பல்சர் சுனில் உள்ளிட்டோர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனிடம் நேற்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.ஆலுவாவில் உள்ள நடிகர் திலீப்பின் வீட்டில் இருக்கும் நடிகை காவ்யா மாதவனிடம் நேற்று காலை பதினொரு மணி முதல் மாலை ஐந்து மணி வரை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது நடிகை கடத்தலில் காவ்யாவுக்கு தொடர்பு உள்ளதா என்பதை அறியும் வகையிலான கேள்விகளை போலீசார் கேட்டதாகவும் ஆனால் நடிகை கடத்தலுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றே காவ்யா கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே காவ்யா மாதவன் விசாரணையின் போது முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே நடிகர் திலீப்பை வரும் 8 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மேலும் படிக்க