• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை கவுதமி சம்பள பாக்கி ராஜ்கமல் நிறுவனம் பார்த்து கொள்ளும் –கமல்

February 27, 2018 தண்டோரா குழு

நடிகை கவுதமிக்கு சம்பள பாக்கி தொடர்பாக ராஜ்கமல் நிறுவனம் பார்த்து கொள்ளும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற மும்பை சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னை திரும்பினார்.

இந்நிலையில், விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

தமிழகத்தில் பல மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பாக படிக்கின்றனர் அதே போல் பிற மாநிலத்திலும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும்.விழுப்புரம் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐஐடி வளாகத்தில் சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டது கண்டனத்துக்குரியது.  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். கவுதமி சம்பள பாக்கி பிரச்னை குறித்து நிறுவனம் மற்றும் ஊழியர்கள் பார்த்து கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க