• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை அமலாபால் கார் வாங்கியது குறித்து 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கிரண்பேடி

October 30, 2017 தண்டோராகுழு

போலி முகவரியில் நடிகை அமலாபால் கார் வாங்கியது குறித்து 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்திரவிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால்.

இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் புதுசேரியில் 1 கோடிக்கும் அதிகமான விலையில் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரை புதுச்சேரியில் தன்னுடைய நிரந்தர முகவரி என கூறி பொய்யான முகவரியில் பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வாகனம் வாங்கி வரி ஏய்ப்பு செய்த அமலாபால் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு விட்டுள்ளார்.மேலும் இனி வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் புதுசேரியில் வாகனம் வாங்குவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க