• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு பதிவு

October 4, 2017 தண்டோரா குழு

மோடி குறித்து விமர்சனம் செய்ததாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகிறார் எனவும் தன்னைவிட மிகச்சிறந்த நடிகர் என்பதை பிரதமர் நிரூபித்திருக்கிறார் எனவும் கூறினார்.

மேலும் தன்னுடைய ஆதரவாளர்களின் செயலை மோடி ஆதரிக்கிறாரா என கேள்வி எழுப்பிய பிரகாஷ்ராஜ் இதுபோன்ற கொடூரச் சம்பவங்களில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனமாக இருந்தால், தன்னுடைய தேசிய விருதுகளை அரசிடம் திருப்பி அளிக்கவும் தயங்க மாட்டேன் என கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்தாக நடிகர் பிரகாஷ்ராஜ் லக்னோ நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு அக்டோபர் 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க