• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் திரையரங்க ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

July 23, 2020 தண்டோரா குழு

நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக கோவையில் பணிபுரியும் திரையரங்க ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பிரபல திரைப்பட நடிகர் சூர்யா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேம்பாலம் அருகில் உள்ள சாரதா வளாகத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் தலைமையில் கேக் வெட்டாமல் எளிமையாக நடைபெற்ற இதில் முன்னதாக நலிந்த குடும்பத்தை சேர்ந்த இளைஞருக்கு மருத்துவ உதவி தொகையாக ரூபாய் ஐந்தாயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போதைய ஊரடங்கு காலத்தால் திரையரங்குகள் மூடியுள்ள நிலையில் வேலையில்லாமல் தவித்து வரும் திரையரங்க ஊழியர்களுக்கு அரிசி,மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது.

சாந்தி திரையரங்க மேலாளர்கள் கார்த்தி மற்றும் மனோகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இதில் 25 க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து த்மை பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.பின்னர் கோவை உக்கடம் பகுதியில் உள்ள டான் போஸ்கோ இல்ல குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை அமைப்பாளர் சக்திவேல் உட்பட மாவட்ட, நகர,பகுதி,ஒன்றிய கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க