• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் அஜித் திரைப்பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார் – வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

September 21, 2019 தண்டோரா குழு

நடிகர் அஜித் நடித்த விவேகம் பட வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி செய்ததாக, தயாரிப்பாளர் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய எழும்பூர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2௦17ம் ஆண்டு வெளியான படம் விவேகம். காஜல் அகர்வால், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்நிலையில், விவேகம் படத்தின் வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி என மலேசிய நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், தயாரிப்பாளர் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய, சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க