• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடத்துநர் இல்லாத அரசு பேருந்துக்கள் பயணிகள் வரவேற்பு

July 5, 2018 தண்டோரா குழு

கோவை – சேலம் இடையே நடத்துநர் இல்லாத அரசு பேருந்து இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. இச்சேவையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இன்று துவங்கி வைத்தார்.

முதல் கட்டமாக கோவையிலிருந்து சேலத்திற்கு 5 பேருந்துகள் இயக்கப்பட்டது.பயணிகளை கவர கூடிய வகையில் பேருந்துகள்,தனியார் பேருந்துகள் போல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.மேலும் முன் சீட்டு பயணிகளுக்கு சீட் பெல்ட் பொருத்தப்பட்டுள்ளது.அதே போல் அவசர கால கதவுகளும் பயணிகள் எளிதில் பயன்படுத்த கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.கோவையிலிருந்து சேலத்திற்கு 155 ரூபாய் இந்த பேருந்தில் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

முதல் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து வந்தவுடன்,சேலம் செல்லக்கூடிய பயணிகளா என்பதை உறுதி செய்தவுடன் பயணிகள் ஏற அனுமதிக்கப்படுகின்றனர்.அதன் பின் வரும் நடத்துனர் டிக்கெட் கொடுக்கிறார்.அதன் பின் அவர் இறக்கியவுடன் கதவுகள் முழுமையாக அடைப்படுகிறது.ஆனால் சேலம் வரையில் எந்த பயணிகளும் ஏற்றபடுவதில்லை.மேலும்,அதிகமாக பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் பயண நேரம் குறைவதாக பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க