• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நகை பறித்ததாக வாலிபர் மீது தாக்குதல்

October 20, 2021 தண்டோரா குழு

நகை பறித்ததாக வாலிபர் மீது தாக்குதல் நடத்திய ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (20). கார்பெண்டர். இவர் சம்பவத்தன்று தனது நண்பர் ரபித் மற்றும் மனோஜ் ஆகியோருடன் இடையர்பாளையத்தில் உள்ள காலி மைதானத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சிலர் அஜித்குமாரிடம், இடையர்பாளையத்தில் ஒரு பெண்ணிடம் நகை பறித்தது நீதானே? என கேட்டு தகராறு செய்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அஜித்குமாரை அவர்கள் இரும்பு ராடால் தாக்கினர். பின்னர் அவரை மிரட்டி விட்டு தப்பி சென்றனர். இது குறித்து அஜித்குமார் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில், அவரை தாக்கியது இடையர்பாளையம் மதுரைவீரன் கோயில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணகுமார் (27), குனியமுத்தூரை சேர்ந்த சசிதரன் (23), இடையர்பாளையம் சர்ச் தெருவை சேர்ந்த மோதிலால் (21) என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தாக்கப்பட்ட அஜித்குமார் கடந்த ஆண்டு நகை பறிப்பில் கைதாகி சிறை சென்று வந்தவர் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

மேலும் படிக்க