• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தோனி மகளுக்கு கேரளாவில் அழைப்பு !

October 28, 2017 தண்டோரா குழு

கிரிக்கெட் வீரர் தோனியின் குழந்தைக்கு கவுரவம் அளிக்கும் வகையில் கேரள கோயில் விழாவுக்கு தலைமையேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 2 வயது மகள் ஸிசா. மோகன்லால் நடித்த அத்வைதம் என்ற திரைப்படத்தில் அம்பப்புழா உன்னி கண்ணோடு நீ என்ற பாடலை டோனியின் மகள் ஸிவா மலையாளத்தில் பாடியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.இந்த பாடல் மூலம் கேரளமாநிலம் ஆழப்புலா மாவட்டம் அம்பலப்புழா உன்னிகிருஷ்ணன் கோயிலும் உலக அளவில்பிரசித்தி பெற்றுவிட்டது.

இதையடுத்து,இக்கோயிலில் ஜனவரி 14-ம் தேதி அன்று நடைபெறும், கலவம் திருவிழாவிற்கு தலைமையேற்கவும் குழந்தை ஸிவாவை கெளரவிக்கவும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பு கடிதத்தை திருவாங்கூர்தேவசம் போர்டு தலைவர் பிரையார் கோபால கிருஷ்ணன் அனுப்பியுள்ளார்.

மேலும் படிக்க