• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொடர் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது -34.4 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

February 18, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் துடியலூர் பகுதியில் தொடர் வீடு புகுந்து திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்த நபர்களை விரைந்து கண்டுபிடிக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.

இதன் பேரில் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனை செய்தும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் தொப்பம்பட்டி பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நபர்களை விசாரணை செய்ததில் துடியலூர் பகுதிகளில் வீடு புகுந்து தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்தவர்கள் என தெரியவந்தது.

கோவில்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்ற திவான் (20), அதே பகுதியை சேர்ந்த நடராஜன் (55) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார் (31) ஆகிய மூன்று நபர்கள் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இதனை அடுத்து காவல்துறையினர் அந்த 3 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 34.4 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க