• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொடருகிறது கூட்டணி; உ.பி.யை தொடந்து ம.பி மற்றும் உத்தரகாண்ட் மாநிலகளிலும் அகிலேஷ் – மாயவதி கூட்டணி!

February 25, 2019 தண்டோரா குழு

மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து, மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிட இருப்பதாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிகள் அறிவித்துள்ளன.

உத்தரபிரதேசத்தில் வரும் மக்களவை தேர்தலில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டனர். உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் கூட்டணியில் இந்த தேர்தலை சந்திப்பது என்ற அறிவிப்பை வெளியிட்டன. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதிக்கு 37, பகுஜன் சமாஜுக்கு 38 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 3 தொகுதிகள் அஜித் சிங்கின் ராஷ் டிரிய லோக் தளத்துக்கு ஒதுக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளன.

இதையடுத்து, மத்தியப் பிரதேசத்தில் 3 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சியும், எஞ்சிய 26 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி ஒரு தொகுதியிலும், பகுஜன் சமாஜ் கட்சி எஞ்சிய 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மேலும் படிக்க