• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

December 19, 2018 தண்டோரா குழு

தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பொதுமக்களுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்றும் வகையில் அரசாணை பிறப்பிக்க கோரி புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தும், போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று அக்கட்சி தலைவர் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி,

“தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்ற கோரியும், மேலும் அதற்கு உரிய அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தியும் நாங்கள் நீண்ட காலமாக போராடி வருகிறோம். எனவே, எங்களது நீண்ட நாள் கோரிக்கையை உடனடியாக அரசு பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் பட்டியில் இருந்து விடுவித்து அரசாணையை வெளியிட வேண்டும்.
எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். கடந்த 10 நாட்களாக, 14 மாவட்ட மக்களோடு அந்தந்த மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தேன். கோரிக்கையை நிறைவேற்ற மாநில அரசுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை, இதனால் அரசுக்கு எவ்வித பொருளாதார பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை.

தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் ஆண்டாண்டு காலமாக விவசாய தொழில் செய்து வருகிறது. அந்த மக்களை அரசு போராட்டத்திற்கு தள்ளாமல், கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க