• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்வு மையங்களில் ஏற்படும் இடையூறுகள் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

June 17, 2017 தண்டோரா குழு

மத்திய அரசுப்பணியாளர் நடத்தும் குடிமைப்பணிக்கான முதனிலை தேர்வாணயம் மையங்களில் ஏதேனும் இடையூறுகள் ஏற்படுமாயின் கண்கானிப்பு அலுவலரையோ, மாவட்ட ஆட்சியரையோ அல்லது 0422 – 2301114, 2301115, 2301116 என்ற தொடர்பு கொள்ளலாம் என்று கோவை மாவட்ட தேர்வு கண்காணிப்பு அலுவலர் ஆனந்தராஜ் விஷ்ணுபாட்டில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நாளை முற்பகல் மற்றும் பிற்பகல் என இரு வேளைகளாக (upsc)குடிமைப்பணி முதனிலை போட்டித் தேர்வுகள் நடத்தப்படவுள்ளது.

தேர்வுக்கான முன்னனேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் தலைமையில், கோவை மாவட்ட தேர்வு கண்காணிப்பு அலுவலர் ஆனந்தராஜ் விஷ்ணுபாட்டில் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேர்வு கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தெரிவிக்கையில், “கோவை மாவட்டத்தில் 22 மையங்களில் மொத்தம் 8755 நபர்கள் இத்தேர்வினை எழுதுகின்றனர். இந்திய அரசு நடத்தும் தேர்வுகளில் மிக முக்கிய தேர்வுகளில் ஒன்றாக இத்தேர்வுகள் இருப்பதால் அனைத்து அலுவலர்கள் கவனமுடன் பணியாற்றிட வேண்டும்.

அனைத்து தேர்வாளர்களும் கண்டிப்பாக கணிப்பான், அலைப்பேசி போன்ற எவ்வித மின்னனு உபகரணங்கள் எடுத்துவரக்கூடாது. தேர்வறை கண்காணிபாளர்கள் இதை உறுதி செய்திடல் வேண்டும்.

காவலர்கள் போதிய அளவில் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் நியமிக்கப்பட்டு பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். தேர்வு மையங்களில் ஏதேனும் இடையூறுகள் ஏற்படுமாயின் கண்கானிப்பு அலுவலரையோ, மாவட்ட ஆட்சியரையோ அல்லது 0422 – 2301114, 2301115, 2301116 என்ற எண்களிலோ தேர்வாளர்கள், தேர்வு நடத்துவர்கள், அலுவலர்கள் தொடர்பு கொள்ளலாம்.

தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுப்பட்டால் அவர்கள் எதிர்காலத்தில் அரசு தேர்வுகள் எழுத தடை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர் லட்சுமி , மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) சிதம்பரம், மற்றும் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க