• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேர்தல் வெற்றி நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது – மோடி

March 11, 2017 தண்டோரா குழு

“உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரா கண்ட் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றி என்னை நெகிழ்ச்சியடையச் செய்துவிட்டது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசம், உத்தரா கண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாயின. அதில் உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரா கண்ட் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது.

இது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் சனிக்கிழமை கூறுகையில், “பா.ஜ.க. மீதான மக்கள் நம்பிக்கைக்கும், மக்கள் தரும் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இந்த மாபெரும் வெற்றி என்னை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் அளித்துள்ள அளவிளான ஆதரவால் உவகை அடைந்தேன். இளைஞர்கள் அளித்துள்ள பேராதரவு மகிழ்ச்சியளிக்கிறது” என்றார் மோடி.

மேலும் படிக்க