• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க கோவை, பாலக்காடு, திருச்சூர் மாவட்ட கலெக்டர்கள் தீவிர ஆலோசனை

March 3, 2021 தண்டோரா குழு

இந்திய தேர்தல் ஆணையம் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பொது தேர்தல் நடத்திட அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து அமைதியான முறையிலும், எவ்வித பாரபட்சமின்றியும் பொது தேர்தல் நடத்துவதில் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி தமிழக கேரள எல்லையோர மாவட்டங்களான கோவை, பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களின் கலெக்டர்கள் ராஜாமணி(கோவை), முருன்மாய் ஜோஷி (பாலக்காடு), சனவாஸ் (திருச்சூர்) ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு இன்பரா மெகா புட் பார்க் வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.

பின்னர் கலெக்டர் ராஜாமணி தெரிவித்ததாவது:

கேரள மாநிலத்தின் எல்லை யோரத்தில் உள்ள கோவை மாவட்டத்தின் சோதனை சாவடிகளான வாளையார், முள்ளி, மேல்பாவியூர், வேலந்தபாளையம், வீரப்பகவுண்டனூர், கோபாலபுரம், மீனாட்சிபுரம், வழுக்குப்பாறை, ஆனைகட்டி ஆகிய ஒன்பது சோதனை சாவடிகளில் சோதனைகளை தீவிரப்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தேர்தல் பரிசுப்பொருட்கள் பரிமாற்றம், பணம் மற்றும் மதுபானம் உள்ளிட்டவற்றினை எடுத்து செல்வதை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவது குறித்தும் அதிக எண்ணிக்கையிலான பொருட்களை வாங்குபவர்களின் விவரங்களை பகிர்தல், சந்தேகத்திற்கு இடமான வகையில் எல்லைகளை கடந்து செல்லும் வாகனங்கள் தொடர்பான விவரம் உள்ளிட்டவை குறித்தும் மாவட்ட கலெக்டர்கள் தரப்பில் ஆலோசனை செய்யப்பட்டது.

பிரதான சோதனை சாவடிகள் மட்டும் அல்லாது, பல்வேறு வழிகளில் எல்லையினை கடக்கும் வழிகளை கண்காணிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.தனிநபர் உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரம் மேற்பட்டதொகை, விலை உயர்ந்த பொருட்களை எடுத்து சென்றால் உடனடியாக பறிமுதல் செய்து, அதன் தகவலை அந்தந்த மாநில கட்டுப்பாட்டு அறை அல்லது தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக பெறப்படும் புகார்களின் மீதும் எடுக்கப்படும் நடவடிக்கைகளை பகிர்தல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தேவையின் அடிப்படையில் மீண்டும் கூட்டங்கள் நடத்தலாம் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அருளரசு (கோவை), விஸ்வநாத் (பாலக்காடு), பூங்குழலி (திருச்சூர்), கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்தியநாதன் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க