• Download mobile app
10 Jun 2025, TuesdayEdition - 3408
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ரயில் மூலம் கோவை வந்த துணை ராணுவ படையினர்

March 16, 2019 தண்டோரா குழு

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் ரயில் மூலம் கோவை வந்தனர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனிடையே, வேட்பு மனு தாக்கல் மார்ச் 19 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பு மனுத் தாக்கல் பாதுகாப்புப் பணிக்காக உத்திரபிரதேச மாநிலம் கோராக்பூரில் இருந்து துணை ராணுவ படையினர் இரு கம்பெனி போலீசார் ரயில் மூலம் கோவை வந்து உள்ளனர். மொத்தம் 168 பேர் வந்து உள்ளனர். அதில் ஒரு கம்பெனி போலீசார் கோவைக்கும் மற்றொரு கம்பெனி போலீசார் மதுரையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். இவர்கள் நிலை கண்காணிப்புக் குழுக்களுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.

இதைத்தொடர்ந்து மார்ச் 30 ஆம் தேதிக்குப் பிறகு கூடுதலாக துணை ராணுவப் படையினர் கோவை வருவார்கள் என காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க