• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தலை முன்னிட்டு அவதூறு தன் மீது அவதூறு பரப்புவதாக கோவையில் திமுக நிர்வாகி புகார் மனு

March 20, 2026 தண்டோரா குழு

கோவை செல்வபுரம் பகுதி 79வது வடக்கழகம் திமுக செயலாளராக உள்ள எம். எச் இப்ராஹீம் புகைப்படத்துடன் கட்சியில் பணிபுரியும் சில பெண்களின் புகைபடத்தை இணைத்து ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்டு இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதனை தொடர்ந்து திமுக 79வது வட்டக் கழகச் செயலாளர் எம்.எச் இப்ராஹிம் கோவை மாநகர காவல் ஆணையத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில்,

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் எனது கட்சியில் பணியாற்றி வரும் சில பெண்களின் புகைப்படத்தை என்னுடன் இணைத்து ஆபாசமாக சித்தரித்துள்ளனர். தேர்தல் வரும் நேரங்களில் எனது பெயருக்கு அவதுறு ஏபேடும் வகையில் கட்சியில் களங்கப்படுத்தும் நோக்கில் ஒரு சிலர் இதுபோன்று செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏ.ஐ, ஜெமினி போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களின் மூலம் இந்த நாசவேலை செய்து வருகின்றனர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இதனை செய்தது யார் என்பதை காவல்துறையினர் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க