December 11, 2018 தண்டோரா குழு
தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவின் மகன் அவரை விட தனது அப்பாவை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று உள்ளது. மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 119 சட்டசபை தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் ஆட்சி அமைக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதில், சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி 85 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 20 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் மற்றும் மற்றவர்கள் 6 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி கூட்டணி பெரும்பான்மையை விட அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவதால், தெலுங்கானா மாநிலத்தில், மீண்டும் சந்திர சேகர ராவ் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், முதல்வருமான சந்திரசேகர ராவ் கஜ்வெல் தொகுதியில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார். எனினும் அவரின் மகனும்,மாநில அமைச்சருமான கே.டி.ராமா ராவ் 89,009 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.இதனால் வாக்கு வித்தியாசத்தில் அப்பாவை மகன் மிஞ்சியுள்ளார்.