• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகளை தீவிரப்படுத்த கோரிக்கை

July 26, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல மன்ற கூட்டம் மண்டல தலைவர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மண்டல உதவி கமிஷனர் மோகனசுந்தரி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி பேசுகையில்,

‘‘பீளமேடு எல்லை தோட்டம் ரோடு, பிகேடி நகர், விகே ரோடு போன்ற பகுதிகளில் தெரு நாய் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. கடந்த வாரம் பிகேடி நகரில் இரண்டு குழந்தைகளை கடித்து விட்டது. இதுகுறித்து புகார் சொல்லியும் கருத்தடை பணிக்காக நாய் பிடிக்கும் வாகனம் வருவதாக சொல்லி இதுவரை வரவில்லை.

எல்லைத் தோட்டம் ரோடு, முருகன் நகர் பகுதிகளில் நாய் வாகனம் வந்ததாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் இதுவரை வரவில்லை. தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் வெறிநோய் தடுப்பூசி போடும் பணிகளை இப்பகுதிகளில் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும் ஆயிரக்கணக்கானோர் தினமும் பயன்படுத்தக்கூடிய பயனீர் மில் ரோடு மிகவும் பழுதடைந்துள்ளது. உடனடியாக அதனை சீர் செய்து தர வேண்டும்,’’ என்றார்.

மேலும் படிக்க