January 4, 2019 தண்டோரா குழு
தெய்வங்களாக இருந்தாலும் கூட ஆக்கிரமிப்பு செய்ய உரிமை இல்லை என உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் தெரிவித்திருக்கிறார்.
தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் 2005ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் கோவை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விநாயகர் கோவில் அனுமதியின்றி கட்டப்பட்டதாகவும் அதை அகற்ற கோரியும் மற்றும் அரசு நிலங்கள், பொது சாலைகளை ஆக்கிரமித்து வழிபாட்டுத் தலங்களை கட்டக் கூடாது என்ற அரசாணையை பின்பற்ற உத்தரவிடுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த வழக்கை விசாரனைக்கு வந்தது வாழ்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசு புறம்போக்கு நிலங்களை அபகரிக்கும் நோக்குடன் சிலர் கோவில் கட்டுகின்றனர். இதை இந்து சமய அறநிலையத்துறை ஊக்குவிக்கக் கூடாது மீறினால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார். மற்றும் பொதுச் சாலைகளை ஆக்கிரமித்து கோவில்கள் கட்டுவதால் வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக நீதிபதி வேதனை தெரிவித்தார். மேலும், தெய்வங்களாக இருந்தாலும் கூட ஆக்கிரமிப்பு செய்ய உரிமை இல்லை என்றார் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்.
இதையடுத்து வருகிற 21ஆம் தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வழிபாட்டுத் தலங்கள் குறித்த விவரங்களின் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.