• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஷூமா ராஜினாமா

February 15, 2018 தண்டோரா குழு

தென் ஆப்பிரிக்காவின் அதிபர் ஜேக்கப் ஷூமா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் அதிபராக ஜேக்கப் ஷூமா கடந்த 2009ம் ஆண்டு பதவியேற்றார்.இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்ததையடுத்து, அவர் மீது அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர் மீதான 78 ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தது.இந்நிலையில் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஆளும் ‘ஏ.என்.சி’ கட்சி வலியுறுத்தியது.இதனையடுத்து ஜேக்கப் ஷூமா இன்று  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும்,கடந்த 2008ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் தபோம்பெகியும் இதே போல ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க