• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென்மேற்கு பருவமழை 33 சதவீதம் அதிகம்

August 17, 2017 தண்டோரா குழு

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 33 சதவீதம் அதிகம் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

இதுக்குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“தமிழகத்தில் 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழை, ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை அண்ணா பல்கலையில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் 1 முதல் தற்போது வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 21 செ.மீ., பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 33 சதவீதம் அதிகம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க