• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூய்மையே சேவை திட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு

September 22, 2017 தண்டோரா குழு

2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி “தூய்மை இந்தியா” திட்டத்தை துவங்கி வைத்தார்.

வரும் 2019ம் ஆண்டு காந்தியின் 150வது பிறந்த நாளிற்குள் இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேற அவரே வாரணாசியில் தூய்மைப்படுத்தும் முயற்சியினை மேற்கொண்டார். அதைப்போல் சமுதாயத்தின் பல பிரிவினரும் “தூய்மை இந்தியா” இயக்கத்திற்கு பல்வேறு வகையில் ஆதரவு அளித்தனர்.

இந்த திட்டம் துவங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இந்த திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில்,

‘தூய்மையே கடவுள்’, என்றும் ‘பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு எனது முழு ஆதரவை வழங்குகிறேன்’ என கூறி உள்ளார்.

மேலும் படிக்க