• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தூத்துக்குடி சிவன் கோவிலில் திருநங்கையை மணந்த இளைஞர்!

October 31, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடியில் நடைபெறவிருந்த திருங்கை திருமணத்திற்கு கோவில் நிர்வாகம் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்த நிலையில் சமரசம் ஏற்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்த ரயில்வே ஒப்பந்த ஊழியரான அருண்குமாரும், வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் பி.ஏ. படித்துவரும் ஸ்ரீஜா என்ற திருநங்கையும் காதலித்துள்ளனர். தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் சங்கர ராமேஸ்வரர்கோவில் உள்ளது. இக்கோயிலில் இவர்கள் திருமணம் இன்று காலை 10.45 மணிக்கு நடைபெற இருந்தது. இருகுடும்பத்தின் சமதத்துடன் நடக்கவிருந்த திருமணத்திற்கு முதலில் சிவன் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, தம்பதிகள் கோவிலுக்கு வந்தபோது, அவர்களது திருமணத்தை பதிவு செய்ய முடியாது என கோவில் நிர்வாக அதிகாரிகள் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திருமணம் செய்தபின்னர், நீதிமன்றத்தை அணுகி, சான்றிதழ் பெற அறிவுறுத்தினர். இதையடுத்து, திருநங்கைக்கும் – இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றது. அனைவரும் மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் படிக்க