April 3, 2019 தண்டோரா குழு
திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறை அறிக்கை அனுப்பியுள்ளது.
திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரிகள், துரை முருகனின் நண்பரின் சிமெண்ட் கிடங்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இன்ஹ்ட சோதனையில் கட்டு கட்டாக பணம், ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது. இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை அறிக்கைக்குப் பின் நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்த அறிக்கையை, தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறை அனுப்பி வைத்துள்ளது. எனினும் இந்த அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.