• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துப்பாக்கி வைத்துக்கொள்ள தடை கோவை ஆட்சியர் எச்சரிக்கை

March 6, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால், துப்பாக்கி வைத்துக்கொள்ள கோவை மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்திருப்பதாவது,

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால், கோவை மாவட்டம் புறநகர் பகுதியில் துப்பாக்கிக்கான உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் உரியதாரர்கள் தங்களது துப்பாக்கிகளை அருகில் காவல் நிலையத்திலோ, அங்கீகாரம் பெற்ற பாதுகாப்பு கிடங்கிலோ தவறாது இருப்பு வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

துப்பாக்கி உரியதாரர்கள் அனைவரும் துப்பாக்கிகளை இருப்பு வைத்துவிட்டார்களா? என்பதை உறுதிப்படுத்துமாறு மாவட்ட காவல் துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில காவல் பணியில் உள்ளவர்களுக்கும், வங்கித்துறையில் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ளும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களுக்கும் துப்பாக்கி வைத்திருப்பதற்கு இத்தடை உத்தரவிலிருந்து விலக்களிக்கப்படுகின்றது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க