• Download mobile app
01 Jul 2025, TuesdayEdition - 3429
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துபாயில் டிராபிக் அபராதம் செலுத்தாத வாகன ஓட்டுநர்களுக்கு சலுகை

November 6, 2017 தண்டோரா குழு

துபாயில் போக்குவரத்து அபராதத்தை செலுத்தாதவர்கள், இவ்வாண்டிற்குள் செலுத்தினால், அவர்களுக்கு 5௦ சதவீதம் தள்ளுப்படி வழங்கப்படும் என்று துபாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருக்கும் துபாயில் நகரில் கடந்த ஆண்டு, போக்குவரத்து விதிகளை மீறியதற்காக, அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அதை செலுத்தாதவர்கள், இந்த ஆண்டிற்குள் செலுத்தினால், அவர்களுக்கு விதிக்கபடிருக்கும் தொகையில், 5௦ சதவீதம் தள்ளுப்படி செய்யப்படும் என்று அந்த நாட்டின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

“போக்குவரத்து விதிகளை மீறியதற்காக, விதிக்கப்பட்ட போக்குவரத்து அபராதம், இவ்வாண்டிற்குள் செலுத்தப்படும் என்றால், அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி உண்டு.அதாவது அபராதத்தை 2017ஆம் ஆண்டுக்குள் செலுத்தினால் 50% வரை சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு நிதி ஆண்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,அபராத தொகையை யூஏபி வங்கிகளில் செலுத்த வேண்டும் அல்லது ஆன்லைன் கட்டணம் உள்ளிட்ட பல மாற்று வழிமுறைகளை பயன்படுத்தி அபராத தொகையை செலுத்தலாம். போக்குவரத்து துறையுடனும், அனைத்து காவல்துறை மற்றும் கார் பதிவு மையங்கள் மற்றும் அனைத்து வணிக மையங்களிலும் கியோஸ்க்களில், அபராத தொகையை செலுத்த முடியும்” என்று துபாய் போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க