• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துணை வேந்தர் நியமனம் குறித்து ஆளுநர் விளக்கம்

April 7, 2018 தண்டோரா குழு

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டது குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கமளித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன்தினம் பிறப்பித்தார். 3 ஆண்டுகளுக்கு துணை வேந்தராக அவர் பதவியில் இருப்பார். கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா துணை வேந்தராக நியமிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டது குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கமாளித்துள்ளார்

இது தொடர்பாக அவர் ,

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் வெளிப்படையாகவும் விதிகளுக்கு உட்பட்டும் நடந்துள்ளது. தேடுதல் குழு பரிந்துரை அடிப்படையிலேயே துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டனர். துணை வேந்தர் நியமனத்தில்  எந்த வித அரசியல் தலையீடும் இல்லை. கல்வி தகுதியின் அடிப்படையிலேயே துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டனர். இறுதி பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட 3 பேரில் சூரப்பா மட்டுமே பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தேவராஜ் உயிரியலிலும், பொன்னுசாமி கணிதத்திலும் முனைவே பெற்றிருந்தனர்.அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 6 பல்கலைக்கழகதிற்கு துணை வேந்தர் பதவி நிரப்பப்படாமல் இருந்தது. துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் வேண்டாம். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார் என ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.

மேலும் படிக்க