• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துணை முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் ஓ. பன்னீர் செல்வம்

August 21, 2017 தண்டோரா செய்திகள்

தமிழகத்தின் துணை முதலமைச்சராக பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இரு அணிகளும் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் இணைந்தது.

இரு அணிகள் இணைப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது தமிழகத்தின் துணை முதலமைச்சராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

துணை முதலமைச்சராக பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வதிற்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.மேலும், வரும் காலத்தில் வளர்ச்சியில் தமிழகம் புதிய உச்சத்தை தொடும் எனவும் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க