• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துணைவேந்தர் சுரப்பவை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் – சிபிஐஎம் ஆர்ப்பாட்டம்

October 20, 2020 தண்டோரா குழு

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கோவையில் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வந்த மருத்துவ விடுப்பு சிறப்பு செயல் விடுப்பு ஆகியவை இனிமேல் வழங்கப்படாது என்றவாறு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இதனை கண்டித்து பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் போராட்டங்களை நடத்தினர்.அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிபிஐஎம் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிஆர் நடராஜன் அவர்களது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பவை கண்டித்தும் அவர் பதவி விலக வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.

மேலும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீடு 7.5 சதவீதத்தை உடனடியாக ஆளுநர் அவர்கள் சட்டமாக இயற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் cpim உறுப்பினர்கள் மாதர் சங்க உறுப்பினர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

மேலும் படிக்க