• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துணைவேந்தர் சுரப்பவை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் – சிபிஐஎம் ஆர்ப்பாட்டம்

October 20, 2020 தண்டோரா குழு

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கோவையில் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வந்த மருத்துவ விடுப்பு சிறப்பு செயல் விடுப்பு ஆகியவை இனிமேல் வழங்கப்படாது என்றவாறு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இதனை கண்டித்து பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் போராட்டங்களை நடத்தினர்.அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிபிஐஎம் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிஆர் நடராஜன் அவர்களது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பவை கண்டித்தும் அவர் பதவி விலக வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.

மேலும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீடு 7.5 சதவீதத்தை உடனடியாக ஆளுநர் அவர்கள் சட்டமாக இயற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் cpim உறுப்பினர்கள் மாதர் சங்க உறுப்பினர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

மேலும் படிக்க