• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துணைப்பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் நியமனம்.

February 15, 2017 தண்டோரா குழு

அ.தி.மு.க.வின் துணைப்பொதுச்செயலாளராக சசிகலாவின் சகோதரர் டி.டி.வி. தினகரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் உறவினர்கள் டி.டி.வி. தினகரன், மருத்துவர் வெங்கடேஷ் ஆகியோர் அ.தி.மு.க. கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் துணைப்பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ‘நமது எம்.ஜி.ஆர்.’ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா வெளியிட்டிருந்தார்.

அவரது அறிக்கையில், டிடிவி தினகரனும் வெங்கடேஷும் தாங்கள் செய்த தவறுக்காக நேரில் மன்னிப்புக் கடிதம் அளித்ததாகவும், அதனை ஏற்று அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்திருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு சசிகலாவின் உறவினர்களான டிடிவி தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அ.தி.மு.க.விலிருந்த வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள சசிகலா, பெங்களூரு நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைகிறார். இந்நிலையில் சசிகலா உறவினர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்பட்டுள்ளது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க