• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துடியலூர் பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர், துணை கமிஷனர் ஆய்வு

August 16, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி 3வது வார்டுக்குட்பட்ட துடியலூர் எம்.பி.சி. நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையின் தரம் குறித்தும், மேட்டுப்பாளையம் பிரதான சாலை துடியலூர் பி.சி.எஸ் நகரில் உள்ள மாநகராட்சி மேல்நிலை குடிநீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் துடியலூர் டவர் லைன் ரோடு பகுதியில் புதிய தார்சாலை அமைக்கப்படுவதற்காக போடப்பட்டு வரும் கற்ச்சாலையின் தரம் குறித்தும் பார்வையிட்டார்.அதே போல் மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் அருகில் கவுண்டம்பாளையம். வடவள்ளி, வீரகேரளம் கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குடிநீர் குழாயில் நீர்கசிவு ஏற்பட்டு நீர் வெளியேறுவதை மாநகராட்சி துணை கமிஷனர் விமல்ராஜ் நேரில் பார்வையிட்டு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாநகர பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் (கிழக்கு) ஞானவேல், உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க