• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீ தடுப்பு பாதுகாப்பு கருவிகளின் சூப்பர் மார்க்கெட் ஏபிசி பயர் இன்டியா கோவையில் துவக்கம்

May 30, 2023 தண்டோரா குழு

சிறியதும் பெரியதுமாக நாடு முழுவதும் ஆங்காங்கே நடக்கும் பல தீ விபத்துக்களால், உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பெருமளவில் சேதம் ஏற்படுகிறது.இதில், தீ விபத்து பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினால் பலவற்றை தடுக்கவும், தவிர்க்கவும் முடியும். அதோடு, திறன்வாய்ந்த தீ தடுப்பு கருவிகளை வைத்திருப்பதும் தீ விபத்து சமயங்களில் பெரிதும் உதவும்.

தீ தடுப்பு, பாதுகாப்பு கருவிகளை மக்களுக்கு அளிப்பதில் முன்னணியில் இருக்கும் ஏபிசி பயர் இன்டியா,புதிய சூப்பர் மார்க்கெட் ஒன்றை தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவையில் காந்திபுரம்,டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் பாங்க் ஆப் பரோடா அருகில், துவக்கியுள்ளது.

இது குறித்து ஏபிசி பயர் இன்டியா உரிமையாளர் ஏ.என் லாரன்ஸ் கூறுகையில்,

“இந்த புதிய சூப்பர் மார்க்கெட்டில் பல அதிநவீன புதிய கருவிகள் அறிமுகம் மட்டுமின்றி, ஒவ்வொரு கருவிகளின் செயல்பாடுகளை அறிய முடியும். அனுபவமும் பெற முடியும்.இந்த துவக்க விழாவின்போது, திறன்வாய்ந்த உயர்ந்த செயல்திறனுடைய “இம்பேக்டர்”என்ற புதிய பிராண்டு தீயணைப்பு கருவிகள் அறிமுகம் செய்யப்படுகிறது. எங்கள் நிறுவனத்தில் மக்களுக்கு தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு பற்றிய பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வழங்கப்படும்.அனைத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு எங்களது பயிற்சி மற்றும் கருவிகளை வழங்குகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய சூப்பர் மார்க்கெட்டை,இந்திய தொழில் வர்த்தகசபை கோவை கிளையின் முன்னாள் தலைவர்,செல்வம் ஏஜென்சீஸ் உரிமையாளருமான நந்தக்குமார் துவக்கி வைத்து பேசும் போது :-இத்தகைய தீ தடுப்பு நிறுவனத்தை துவக்கிவைப்பது மிகவும் பெருமையாக உள்ளது என்றார்.

முதல் விற்பனையை சிஆர்ஐ பம்ப்ஸ் பிரைவேட் லிமிடெட் துணைத்தலைவர் எஸ்.திருமூர்த்தி தொடங்கி வைத்தார்.முதல் விற்பனை தீயணைப்பு கருவியை அகர்வால் ஸ்வீட் பேலஸ் உத்கரஸ் அகர்வால் பெற்றுக் கொண்டார். அடுக்கு மாடி குடியிருப்புக்கான முதல் ஹைட்ரன்ட் கருவியை, கிரடாய் அமைப்பின் கோவை கிளை துணைத்தலைவர் டி. அபிஷேக் பெற்றுக் கொண்டார்.

துவக்க விழாவில், பிபி அசோஷியேட்ஸ் பி. பி. சுப்ரமணியன், கிரடாய் தலைவர் குகன் இளங்கோ, ஜூபிலன்ட் தலைவர் அபுதாஹீர், இந்திய பிளம்பிங் சங்கத்தின் தலைவர் கோவை கிளை தலைவர் பிரகாஷ் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க