• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை கடை வீதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

October 20, 2020 தண்டோரா குழு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை டவுன்ஹால், காந்திபுரம் உள்ளிட்ட முக்கிய கடை வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து போலிஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, கிருஸ்துமஸ் பண்டிகைகளை முன்னிட்டு டவுன்ஹால், ஒப்பணைகாரர் வீதி, 100 அடி சாலை, காந்திபுரம் உள்ளிட்ட முக்கிய கடை வீதிகளில் தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல் இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகரில் உள்ள முக்கிய கடை வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக சாலை ஓரங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் தொற்று பரவல் காலம் என்பதால் பெண் போலிஸார் ஒலிப்பெருக்கி மூலம் முக்க்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடை பிடிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள் உடமைகளை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவித்து வருகின்றனர். மேலும் சாதாரண உடையில் போலிஸார் மக்கள் கூடும் இடங்களை கண்காணித்து வருகின்றனர்.

மேலும் படிக்க