• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையையொட்டி 42 மீனவர்கள் விடுவிப்பு

October 9, 2017 தண்டோரா குழு

தீபாவளி பண்டிகையையொட்டி 42 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.குடியரசு தினம்,சுதந்திர தினம் போன்ற நாட்களில் நல்லெண்ண அடிப்படையில் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.இந்நிலையில் இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிக்கும்படி இலங்கை அரசுக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்து இருந்தது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களை விடுதலை செய்யப்படவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க